» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத்: நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா

செவ்வாய் 19, செப்டம்பர் 2023 7:54:51 PM (IST)



நல்லாசிரியர் விருது பெற்ற கீழக்கல்லாம்பாறை பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் நல்லாசிரியர் விருது வழங்கியது. இந்த விருதுக்கு குரும்பூர் அருகே உள்ள கீழக்கல்லாம்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ராஜாத்தி கிரசன்சியா தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் நடந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் ராஜாத்தி கிரசன்சியாவுக்கு விருது வழங்கினார். 

இதனைத்தொடர்ந்து கீழக்கல்லாம்பாறை கிராம மக்கள் மற்றும் பள்ளி நிர்வாக கமிட்டி சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராஜாத்தி கிரசன்சியாவுக்கு பாராட்டு விழா நடத்தியது. இதில் கிராமமக்களும், பள்ளி நிர்வாக கமிட்டியினரும் விருது பெற்ற ஆசிரியருக்கு நினைவு பரிசுகள் வழங்கினர். இதில்  தென்திருப்பேரை டவுன் பஞ்., தலைவர் மணிமேகலை ஆனந்த், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் கிராமமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory