» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத்: நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
செவ்வாய் 19, செப்டம்பர் 2023 7:54:51 PM (IST)

நல்லாசிரியர் விருது பெற்ற கீழக்கல்லாம்பாறை பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் நல்லாசிரியர் விருது வழங்கியது. இந்த விருதுக்கு குரும்பூர் அருகே உள்ள கீழக்கல்லாம்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ராஜாத்தி கிரசன்சியா தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் நடந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் ராஜாத்தி கிரசன்சியாவுக்கு விருது வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து கீழக்கல்லாம்பாறை கிராம மக்கள் மற்றும் பள்ளி நிர்வாக கமிட்டி சார்பில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராஜாத்தி கிரசன்சியாவுக்கு பாராட்டு விழா நடத்தியது. இதில் கிராமமக்களும், பள்ளி நிர்வாக கமிட்டியினரும் விருது பெற்ற ஆசிரியருக்கு நினைவு பரிசுகள் வழங்கினர். இதில் தென்திருப்பேரை டவுன் பஞ்., தலைவர் மணிமேகலை ஆனந்த், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் கிராமமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் ரீட்ஸ் செயல்முறை விளக்க நிகழ்ச்சி!
வியாழன் 7, டிசம்பர் 2023 5:06:12 PM (IST)

மர்காஷிஸ் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதி வண்டிகள் வழங்கும் விழா!
புதன் 6, டிசம்பர் 2023 7:43:03 PM (IST)

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
புதன் 6, டிசம்பர் 2023 7:39:53 PM (IST)

மூக்குப்பீறி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!
வியாழன் 30, நவம்பர் 2023 4:20:07 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம்
புதன் 29, நவம்பர் 2023 5:08:30 PM (IST)

மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவன் சிறப்பிடம்! .
சனி 25, நவம்பர் 2023 8:33:49 PM (IST)
