» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கல்வி வளர்ச்சி தின திறன் மேம்பாட்டு போட்டிகள்

புதன் 12, ஜூலை 2023 3:02:48 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஊராட்சி ஒன்றியம், வி செங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து வட்டார அளவிலான கல்வி வளர்ச்சி தின திறன் மேம்பாட்டு போட்டிகள் நடைபெற்றது.

புதூர் வட்டார அளவிலான கல்வி வளர்ச்சித் தின திறன் மேம்பாட்டு போட்டியில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 1ம்வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வர்ணம் தீட்டுதல்,ஓவியம் வரைதல்,தனிநபர் நடிப்பு,கட்டுரை போட்டி,பேச்சுப்போட்டி, கதை சொல்லுதல்,திருக்குறள் ஒப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு செங்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயமீனா தலைமை வகித்தார்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வ வடிவேல் முன்னிலை வகித்தார்.செங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறன் மேம்பாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory