» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆயுதத்துடன் வந்த நபர் கைது: குற்றச் சம்பவத்தை முறியடித்த போலீஸாருக்கு டிஐஜி பாராட்டு!

வெள்ளி 26, ஜூன் 2026 8:44:01 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாகன தணிக்கையின் போது, ஆயுதத்துடன் வந்த நபரைக் கைது செய்து பெரும் குற்றச் சம்பவம் நடைபெறாமல் தடுத்த ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (ஜூன் 25) போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த நபர் ஒருவரைப் போலீசார் தடுத்து நிறுத்திச் சோதனை செய்தனர்.

அச்சோதனையில், அந்த நபர் ஏதோனும் ஒரு குற்றத்தைச் செய்யும் நோக்குடன் பயங்கர ஆயுதங்களை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சமயோசிதமாகச் செயல்பட்ட போலீசார் அந்த நபரைக் கைது செய்து, அவரிடமிருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். இதன்மூலம் அப்பகுதியில் நடக்கவிருந்த ஒரு பெரும் குற்றச் சம்பவம் முன்கூட்டியே தடுக்கப்பட்டது.

குற்றச் சம்பவம் நடைபெறாமல் தடுத்து, மெச்சத்தக்க வகையில் மிகச் சிறந்த காவல் பணியை மேற்கொண்ட ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்வேல்குமார், முதல் நிலை காவலர்கள் சிவப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், அருண்பாண்டியன் மற்றும் காவலர் சுந்தரபாண்டியன் ஆகியோரைத் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு இன்று நேரில் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory