» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் அருகே கஞ்சா விற்பனை: வாலிபர் கைது!
வெள்ளி 26, ஜூன் 2026 8:39:53 PM (IST)
திருச்செந்தூர் கீழ நாலுமூலைகிணறு பகுதியில் விற்பனைக்காகச் சட்டவிரோதமாகக் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்து, அவரிடமிருந்து 125 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கும் பொருட்டுப் போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கீழ நாலுமூலைகிணறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரைப் பிடித்துப் போலீசார் சோதனை நடத்தினர்.அச்சோதனையில், அவர் விற்பனைக்காகச் சட்டவிரோதமாகக் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்ற சஞ்சய் (22) என்பவரைத் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மதுரை வீரன் கைது செய்து வழக்குப்பதிவு செய்தார். மேலும், அவரிடமிருந்த 125 கிராம் கஞ்சா போதைப்பொருளையும் போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆயுதத்துடன் வந்த நபர் கைது: குற்றச் சம்பவத்தை முறியடித்த போலீஸாருக்கு டிஐஜி பாராட்டு!
வெள்ளி 26, ஜூன் 2026 8:44:01 PM (IST)

தாமிரபரணி சீரமைப்புப் பணிக்காகத் தனது முதல் மாதச் சம்பளத்தை வழங்கினார் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ!
வெள்ளி 26, ஜூன் 2026 8:15:08 PM (IST)

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: காவல் துறையின் விழிப்புணர்வு பாடல் வெளியீடு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:49:15 PM (IST)

தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை: சிஐடியு பேரவையில் தீர்மானம்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:45:49 PM (IST)

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் - நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்!
வெள்ளி 26, ஜூன் 2026 4:51:59 PM (IST)








