» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்: காவல் துறையின் விழிப்புணர்வு பாடல் வெளியீடு!

வெள்ளி 26, ஜூன் 2026 5:49:15 PM (IST)



சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை சார்பாக தயாரிக்கப்பட்ட "மாறு" என்ற விழிப்புணர்வு பாடல் இன்று வெளியிடப்பட்டது.

நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் திருநாவுக்கரசு இப்பாடலை வெளியிட, அதனைத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த மோகன் பெற்றுக் கொண்டார். இப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர், மாவட்ட ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிகாரிகள் அனைவரும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை எடுத்துரைத்ததுடன், வரும் தலைமுறையினரைக் காக்கவும், போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் ஒன்றிணைந்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory