» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முதலமைச்சர் விஜய் பற்றி அவதூறு பேச்சு: திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு!

புதன் 24, ஜூன் 2026 10:09:43 AM (IST)

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் ஆத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிகையுடன் வீட்டில் இருப்பதாகக் கூறி, அவரை ஒருமையில் அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

பொதுக்கூட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பேசியது மற்றும் முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பியது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர் செல்வமுருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல் நிலைய போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 353 மற்றும் 354 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

ஒரு தொண்டன்Jun 24, 2026 - 11:41:41 AM | Posted IP 172.7*****

அனிதா ராதாகிருஷ்ணன் என்ற பழைய குற்றவாளிக்கு ஆள் வளர வளர அறிவு வளரவே இல்லை. எப்படியாவது ஆட்சியை கைப்பற்றனும் என்பதே அனிதாவின் நோக்கம், எப்போ பார்த்தாலும் தவக மீது கத்திடே இருக்கு. திருச்செந்தூர் ஏரியா வை சுத்தப்படுத்த வேற வேலையே இல்லை. ச்சை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory