» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டவிரோத மது விற்பனை: இருவர் அதிரடி கைது!
புதன் 24, ஜூன் 2026 7:56:37 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட இருவரைப் போலீசார் இன்று கைது செய்து, அவர்களிடமிருந்து 32 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்குடி புதிய பாலம் பகுதியில் இன்று (24.06.2026) சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவைகுண்டம் பொன்னன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் இசக்கி (55) மற்றும் ஸ்ரீவைகுண்டம் கீழகோட்டை வாசல் தெருவைச் சேர்ந்த இராமையா மகன் இசக்கிராஜ் (40) ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையைத் தொடர்ந்து, ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து இசக்கி மற்றும் இசக்கிராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும், சட்டவிரோத விற்பனைக்காக அவர்கள் வைத்திருந்த மொத்தம் 32 மது பாட்டில்களையும் போலீசார் முறைப்படி பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 24, ஜூன் 2026 9:58:18 PM (IST)

முதலமைச்சர் விஜயின் பேச்சு ஆணவத்தின் உச்சம்: திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம்!
புதன் 24, ஜூன் 2026 8:49:49 PM (IST)

பேய்குளம் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை!!
புதன் 24, ஜூன் 2026 8:24:07 PM (IST)

வழக்குகள் மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது : அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ சவால்!
புதன் 24, ஜூன் 2026 5:53:38 PM (IST)

தூத்துக்குடியை எழில்மிகு நகரமாக்கப் புதிய திட்டம்: மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனை!
புதன் 24, ஜூன் 2026 5:41:11 PM (IST)

வேலைவாய்ப்பு தரும் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்: ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுரை!
புதன் 24, ஜூன் 2026 4:31:49 PM (IST)








