» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!

புதன் 24, ஜூன் 2026 9:58:18 PM (IST)

தூத்துக்குடியில் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், குற்றவாளியான இளைஞருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தூத்துக்குடி அருகே உள்ள வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த மங்கேஷ்குமார் (26) என்பவரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கின் இறுதி விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் முழுமையாக ஆராயப்பட்ட நிலையில், இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பைப் போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இன்று (24.06.2026) வெளியிட்டார்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட மங்கேஷ்குமார் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என நீதிபதி உறுதி செய்தார். இதையடுத்து, குற்றவாளி மங்கேஷ்குமாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 12,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பிரீத்தா தனது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளார். போலீசாரின் விரைவான சட்ட நடவடிக்கையால் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory