» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஏப்.4, 5ல் மாபெரும் பிராண சிகிச்சை முகாம்: அனுமதி முற்றிலும் இலவசம்!

வியாழன் 2, ஏப்ரல் 2026 12:39:43 PM (IST)

தூத்துக்குடியில் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மருந்து, மாத்திரைகள் இல்லாத 'MCKS பிராண சிகிச்சை' சிறப்பு முகாம் வருகிற 4 மற்றும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து பிராண நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "MCKS பிராண சிகிச்சை என்பது நோயாளியைத் தொடாமலும், மருந்து மாத்திரைகள் இல்லாமலும் செய்யப்படும் ஒரு நவீன சிகிச்சை முறையாகும். பிராணா' எனப்படும் உயிர்ச்சக்தியைப் பயன்படுத்தி, உடல் உபாதைகள் மற்றும் மனோவியல் ரீதியான சிக்கல்களைச் சீரமைக்க இச்சிகிச்சை பெரிதும் உதவுகிறது.

தூத்துக்குடியில் இம்முகாம் வருகிற 4 மற்றும் 5 (சனி - ஞாயிறு) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை "MCKS பிராண நிலையம், AG காம்ப்ளக்ஸ், முதல் தளம், ராஜா ஸ்டோர்ஸ் அருகில்" என்ற முகவரியில் வைத்து நடைபெற உள்ளது. முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். முன்பதிவிற்கு 98944 85991 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு பிராண நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory