» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு டவுன் பஸ் மோதி பெண் உயிரிழப்பு : ஓட்டுநர் கைது - திருச்செந்தூரில் சோகம்!

வியாழன் 2, ஏப்ரல் 2026 12:32:04 PM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த திருச்சியைச் சேர்ந்த பெண், அரசு டவுன் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி உறையூர் அழகர் சோலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (37). இவர் தனது உறவினர்களுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று வந்திருந்தார். கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய சரண்யா, அங்கிருந்து நடந்து கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, திருச்செந்தூர் பேருந்து நிலையத்திலிருந்து கோவில் வாசல் நோக்கிச் சென்ற அரசு டவுன் பஸ், எதிர்பாராதவிதமாகச் சரண்யா மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது, பேருந்தின் முன்பக்க டயர் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சரண்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார், சரண்யாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரான தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் (59) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து, அங்கிருந்த பிற பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory