» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி உள்பட 2 தொகுதிகளில் தமிழ்ப் பேரரசு கட்சி போட்டி: வேட்பாளர்கள் அறிவிப்பு!

வியாழன் 2, ஏப்ரல் 2026 12:07:50 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி உள்பட 2 தொகுதிகளில் தமிழ்ப் பேரரசு கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் வ.கௌதமன் அறிவித்துள்ளார். 

திரைப்பட இயக்குநர் வ.கௌதமன் தலைமையிலான தமிழ்ப் பேரரசு கட்சி, வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதன்படி குன்னம் (பெரம்பலூர்) தொகுதியில் வழக்கறிஞர் த. அன்புத்தமிழன் போட்டியிடுகிறார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் வழக்கறிஞர் செ. சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

மொழி, நிலம் மற்றும் தமிழர் அதிகாரம் ஆகியவற்றை மீட்டெடுக்கச் சமரசமின்றிப் போராடப் போவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய திரையிசை மயக்கம் மற்றும் இலவச அரசியலைத் துறந்து, மக்கள் நேர்மையானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனப் பொதுச்செயலாளர் வ.கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு உரிமை மற்றும் நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் முன்னின்ற தங்களது குரல், இனி சட்டமன்றத்திலும் ஒலிக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory