» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது!
புதன் 4, மார்ச் 2026 8:30:14 AM (IST)
ஆறுமுகநேரியில் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜா மற்றும் போலீசார் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேயன்விளை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் அருகே நபர் ஒருவர் கஞ்சா விற்பதாகப் போலீசாருக்குத் ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.
பள்ளிக்கூடம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒரு நபர், போலீசாரைப் பார்த்தவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை விடாமல் துரத்திப் பிடித்த போலீசார் சோதனையிட்டபோது, அவரிடம் சிறிய பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆறுமுகநேரி பாரதி நகர் மேலத்தெருவைச் சேர்ந்த மகாராஜா மகன் செல்லத்துரை (36) என்பதும், அவர் கூலித்தொழிலாளி என்பதும் தெரியவந்தது. பள்ளி அருகே கஞ்சா விற்றதை அவர் ஒப்புக்கொண்டதையடுத்து, ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி
புதன் 4, மார்ச் 2026 5:27:54 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

தூத்துக்குடியில் 10 மாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா : எஸ்பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்!
புதன் 4, மார்ச் 2026 4:04:36 PM (IST)

ரூ.2 கோடி பேவர் பிளாக் நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலம்: பாஜக கடும் கண்டனம்
புதன் 4, மார்ச் 2026 4:02:30 PM (IST)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.150 கோடி விரிவாக்கப் பணி: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
புதன் 4, மார்ச் 2026 3:19:59 PM (IST)

தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரிக்கு யுஜிசி அங்கீகாரம்
புதன் 4, மார்ச் 2026 3:09:04 PM (IST)









