» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரூ.2 கோடி பேவர் பிளாக் நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலம்: பாஜக கடும் கண்டனம்
புதன் 4, மார்ச் 2026 4:02:30 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலம் அடைந்துள்ளது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்துப் பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட மீளவிட்டான் சாலையில், சீனா வானா குளம் கரையோரத்தில் கடந்த 2022–2023ஆம் ஆண்டில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில், 2,480 மீட்டர் நீளத்திற்குச் சிமெண்ட் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கப்பட்டது.
திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், நடைபாதை பல இடங்களில் உடைந்து சிதிலமடைந்துள்ளது. பராமரிப்பு இல்லாததால் நடைபாதையின் இருபுறமும் முள்செடிகள் மண்டி, புதர்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இதனால் இப்பகுதி விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகளின் நடமாட்டம் மிகுந்த இடமாக மாறியுள்ளதாகப் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஒப்பந்த விதிகளின்படி குறிப்பிட்ட காலம் வரை திட்டத்தைப் பராமரிக்க வேண்டிய கடமை ஒப்பந்ததாரருக்கு உண்டு. அவ்வாறு இருக்கையில், மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்காததும், அவரது பாதுகாப்பு வைப்புத் தொகையைப் (Security Deposit) பிடித்து வைக்காததும் மக்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் கண்காணிப்பு குறைபாடே ₹2 கோடி மக்கள் வரிப்பணம் வீணாவதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
₹2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலமடைந்திருப்பது மிகப்பெரிய நிர்வாகத் தோல்வியாகும். பணிகளில் தரம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும். உடனடியாக நடைபாதையைச் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை எனில், பொதுமக்கள் சார்பாக மாவட்ட அளவில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி
புதன் 4, மார்ச் 2026 5:27:54 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

தூத்துக்குடியில் 10 மாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா : எஸ்பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்!
புதன் 4, மார்ச் 2026 4:04:36 PM (IST)

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.150 கோடி விரிவாக்கப் பணி: முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
புதன் 4, மார்ச் 2026 3:19:59 PM (IST)

தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரிக்கு யுஜிசி அங்கீகாரம்
புதன் 4, மார்ச் 2026 3:09:04 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்ச் 6-ல் சனிப்பெயர்ச்சி விழா: பரிகார பூஜைகளுக்கு ஏற்பாடு
புதன் 4, மார்ச் 2026 12:55:26 PM (IST)









