» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி

புதன் 4, மார்ச் 2026 5:27:54 PM (IST)



சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் விழிப்புணர்வுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பு கிராமத்தில் வ.உ.சிதம்பரம் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் (அலகு 70) அய்யனடைப்பு கிராமத்தில் பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமின் முக்கிய நிகழ்வாக, திட்ட அலுவலர் செல்வம் தலைமையில் மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மேற்கொண்டனர்.

ஜனநாயகக் கடமையான வாக்களிப்பை 100% உறுதி செய்தல், வாக்களிக்கப் பணம் வாங்குவதைத் தவிர்த்தல், தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதுடன், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு, வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory