» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு : தாயிடம் போலீசார் விசாரணை

செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:52 PM (IST)

குலசேகரப்பட்டினம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது பெண் குழந்தை இறந்த சம்பவம் குறித்து தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள செட்டியாபத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மனைவி சத்தியா. இந்த தம்பதிக்கு சந்தோஷயானா என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. இன்று மதியம் இந்த குழந்தை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விட்டதாக கூறி அவரது தாயார் குலசேகரப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டதா? அல்லது தவறி விழுந்து இறந்ததா என்று தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory