» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2பேர் கைது : 2 வாகனங்கள் மீட்பு!

செவ்வாய் 20, ஜனவரி 2026 10:53:25 AM (IST)

தூத்துக்குடியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இளஞ்சிறார் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனியைச் சேர்ந்தவர் ராகவன் மகன் ஜான் (40), இவர் கடந்த 15ஆம் தேதி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள ஒரு கடை முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருடுபோயிருப்பது தெரியவந்தது 

இது குறித்து அவர் வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தை சேர்ந்த ஜெயராம் மகன் ஜெய்சந்திரன் (40) மற்றும் 17 வயது இளம்சிறாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். 

விசாரணையில் அவர்கள், ஜான் பைக்கையும், தூத்துக்குடி டிஆர் தெருவை சேர்ந்த நம்பி மகன் சிவசுப்பிரமணியன் (55) என்பவர் தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக்கையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இளஞ்சிறார் உட்பட 2பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory