» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2பேர் கைது : 2 வாகனங்கள் மீட்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 10:53:25 AM (IST)
தூத்துக்குடியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இளஞ்சிறார் உட்பட 2பேரை போலீசார் கைது செய்தனர். 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனியைச் சேர்ந்தவர் ராகவன் மகன் ஜான் (40), இவர் கடந்த 15ஆம் தேதி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள ஒரு கடை முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருடுபோயிருப்பது தெரியவந்தது
இது குறித்து அவர் வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தை சேர்ந்த ஜெயராம் மகன் ஜெய்சந்திரன் (40) மற்றும் 17 வயது இளம்சிறாரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், ஜான் பைக்கையும், தூத்துக்குடி டிஆர் தெருவை சேர்ந்த நம்பி மகன் சிவசுப்பிரமணியன் (55) என்பவர் தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக்கையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இளஞ்சிறார் உட்பட 2பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் காலனியைச் சேர்ந்தவர் ராகவன் மகன் ஜான் (40), இவர் கடந்த 15ஆம் தேதி கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள ஒரு கடை முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்று உள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருடுபோயிருப்பது தெரியவந்தது
இது குறித்து அவர் வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள் புரத்தை சேர்ந்த ஜெயராம் மகன் ஜெய்சந்திரன் (40) மற்றும் 17 வயது இளம்சிறாரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், ஜான் பைக்கையும், தூத்துக்குடி டிஆர் தெருவை சேர்ந்த நம்பி மகன் சிவசுப்பிரமணியன் (55) என்பவர் தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த பைக்கையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் இளஞ்சிறார் உட்பட 2பேரையும் போலீசார் கைது செய்தனர். 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)

தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் முடிவு?
புதன் 4, மார்ச் 2026 8:08:03 PM (IST)

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி
புதன் 4, மார்ச் 2026 5:27:54 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

தூத்துக்குடியில் 10 மாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா : எஸ்பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்!
புதன் 4, மார்ச் 2026 4:04:36 PM (IST)

ரூ.2 கோடி பேவர் பிளாக் நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலம்: பாஜக கடும் கண்டனம்
புதன் 4, மார்ச் 2026 4:02:30 PM (IST)









