» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை

புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்  உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்து விரைந்து தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட காவல் அலுவலகத்தில் இந்தக் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த 32 மனுதாரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாகச் சந்தித்துத் தங்கள் புகார்களைத் தெரிவித்தனர். நிலத் தகராறு, குடும்பப் பிரச்சினைகள் மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் தொடர்பான மனுக்கள் எஸ்பி அவர்களிடம் வழங்கப்பட்டன.

பொதுமக்களின் புகார்களைப் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி. மதன், அந்த மனுக்கள் மீது உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டத்திற்குட்பட்ட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory