» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய டிரைவர் கைது

திங்கள் 19, ஜனவரி 2026 11:05:35 AM (IST)

தூத்துக்குடியில் மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மாலை நாசரேத் நோக்கி சென்ற அரசு பேருந்தை தற்காலிக டிரைவரான புதியம்புத்தூரைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் ரமேஷ் (36) என்பவர் இயக்கிச் சென்றார்.  பேருந்தில் 42 பயணிகள் இருந்தனர். முத்தையாபுரம் அருகே வந்தபோது பேருந்து தாறுமாறாக சென்றதாக தெரிகிறது. 

இதையடுத்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையிலான போலீசார் பேருந்தை நிறுத்தி விசாரித்தபோது டிரைவர் ரமேஷ், மது போதையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிரைவரை கைது செய்தனர். மேலும் மாற்று டிரைவர் மூலம் பேருந்து இயக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட டிரைவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory