» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பெருமாள்சாமி நியமனம்

திங்கள் 19, ஜனவரி 2026 7:33:44 AM (IST)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினருமான க.பெருமாள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) மேற்பார்வையில், மாநிலத் தலைமையும், மூத்த தலைவர்களும் இணைந்து, மாவட்ட வாரியாகக் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள், களநிலவரம் ஆகியவற்றை ஆய்வு செய்து,  புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். சமீபத்தில் தமிழகத்தில் புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க, பிற மாநிலங்களிலிருந்து மேலிடப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, நிர்வாகிகளை மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன 

அதன் அடிப்படையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளரும் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினருமான க.பெருமாள்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், செயல்பாடுகளைச் சீரமைக்கவும் இந்த நியமனங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. மேலும், இது தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர், மூத்த நிர்வாகிகள், இளைஞர்கள் மத்தியில் வரவரவற்பை பெற்றுள்ளது. 


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Jan 19, 2026 - 10:32:38 AM | Posted IP 104.2*****

தொண்டனே இல்லாத கட்சிக்கு தலைவர் மட்டும் எதற்கு?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory