» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உட்பட 2 பேர் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!
ஞாயிறு 18, ஜனவரி 2026 8:29:40 AM (IST)
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் உட்பட 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகள் முத்துச்செல்வி என்ற முத்துமாரி (24). இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, பிப்.15ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் முத்துமாரி, கல்லூரியில் படித்து வந்த தன்னுடைய உறவினரான மணியாச்சி ஒட்டநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவா மகன் கலைச்செல்வன் (22) என்பவருடன், தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் வேலை செய்யும் தனது தந்தையை பார்க்க பைக்கில் நேற்று சென்றாராம்.
அப்போது, துறைமுகத்திலிருந்து உரம் ஏற்றி வந்த டிப்பர் லாரி, அவர்களது பைக் மீது மோதியதாம். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இத்தகவலறிந்த தெர்மல் நகர் போலீசார், அவர்களது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரடி விசாரணை
புதன் 4, மார்ச் 2026 8:14:22 PM (IST)

தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சருக்கு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் முடிவு?
புதன் 4, மார்ச் 2026 8:08:03 PM (IST)

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி
புதன் 4, மார்ச் 2026 5:27:54 PM (IST)

அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
புதன் 4, மார்ச் 2026 5:00:24 PM (IST)

தூத்துக்குடியில் 10 மாடி காவலர் குடியிருப்பு திறப்பு விழா : எஸ்பி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்!
புதன் 4, மார்ச் 2026 4:04:36 PM (IST)

ரூ.2 கோடி பேவர் பிளாக் நடைபாதை இரண்டே ஆண்டுகளில் சிதிலம்: பாஜக கடும் கண்டனம்
புதன் 4, மார்ச் 2026 4:02:30 PM (IST)










சாமுவேல்Jan 20, 2026 - 02:12:58 PM | Posted IP 104.2*****