» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொங்கல் பரிசு தொகை முதியவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 14, ஜனவரி 2026 3:27:24 PM (IST)
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகை முதியவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு கவுரவ செயலாளர் ஆ.சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழக முதல்வர் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 3000 உதவித் தொகையுடன் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
அதே வேளையில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குடும்ப அட்டையில் தங்களது கைரேகை சரியாக பதிவிடப்படாததினால் அவர்களுக்கு கிடைக்க கூடிய பொங்கல் பரிசு தொகை வழங்காமல் இருந்து வருகின்றது.
இது குறித்து அந்தந்த பொது விநியோகத் திட்ட கடை அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு கை ரேகை பதிவிட்டால் மட்டும்தான் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது அதை மீறி நாங்கள் வழங்க இயலாது என்று கூறி வருகின்றனர்.
இதனால் முதியவர்கள் மற்றும் கைரேகை பதிவு செய்யப்படாதவர்கள் மிகுந்த மன உளைச்சலிலும் குழப்பத்திலும் இருந்து வருகின்றனர். மேற்படி முதியவர்களுக்கும் முறையாக ஆய்வு செய்தும் அல்லது மாற்று ஏற்பாடு செய்து அரசு வழங்கக்கூடிய பொங்கல் பரிசுத் திட்டத்தினை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழக முதல்வர் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 3000 உதவித் தொகையுடன் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதே வேளையில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குடும்ப அட்டையில் தங்களது கைரேகை சரியாக பதிவிடப்படாததினால் அவர்களுக்கு கிடைக்க கூடிய பொங்கல் பரிசு தொகை வழங்காமல் இருந்து வருகின்றது.
இது குறித்து அந்தந்த பொது விநியோகத் திட்ட கடை அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு கை ரேகை பதிவிட்டால் மட்டும்தான் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது அதை மீறி நாங்கள் வழங்க இயலாது என்று கூறி வருகின்றனர்.
இதனால் முதியவர்கள் மற்றும் கைரேகை பதிவு செய்யப்படாதவர்கள் மிகுந்த மன உளைச்சலிலும் குழப்பத்திலும் இருந்து வருகின்றனர். மேற்படி முதியவர்களுக்கும் முறையாக ஆய்வு செய்தும் அல்லது மாற்று ஏற்பாடு செய்து அரசு வழங்கக்கூடிய பொங்கல் பரிசுத் திட்டத்தினை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது : தூத்துக்குடியில் செல்வப்பெருந்தகை பேட்டி
வெள்ளி 6, மார்ச் 2026 4:12:44 PM (IST)

தருவைகுளம் பகுதியில் தூண்டில் வளைவு திட்டம்: முதல் அமைச்சருக்கு மீனவர்கள் நன்றி!
வெள்ளி 6, மார்ச் 2026 3:55:58 PM (IST)

தாட்கோ மூலம் கேட்டரிங் டெக்னாலஜி பயிற்சி : மாணாக்கர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 6, மார்ச் 2026 3:29:37 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நாய் கடித்து 14 பணியாளர்கள் காயம்!
வெள்ளி 6, மார்ச் 2026 3:22:22 PM (IST)

ஈரான் மீதான தாக்குதலைக் கண்டித்து வ.உ.சி கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வெள்ளி 6, மார்ச் 2026 11:29:00 AM (IST)

துணை முதல்வர் உதயநிதி நாளை தூத்துக்குடி வருகை: ரூ.300 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம்!
வெள்ளி 6, மார்ச் 2026 11:17:52 AM (IST)









