» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக முதல்வருக்கு சூரிய பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்பிய அரசு பள்ளி மாணவிகள்

புதன் 14, ஜனவரி 2026 3:12:16 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைபள்ளி மாணவிகள் தமிழக முதல்வருக்கு சூரிய பொங்கல் வாழ்த்து அட்டைகளை தபால் பெட்டியில் அனுப்பி வைத்தனர்.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் மாவட்ட முழுவதும் அஸ்ட்ரோ கிளப்புகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. வருகிற தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சூரியனை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சூரியனைப் பற்றிய குறிப்புகள் உள்ள சூரிய பொங்கல் வாழ்த்து அட்டையை தயாரித்துள்ளது.

சூரிய பொங்கல் வாழ்த்து அட்டையினை பள்ளி மாணவிகள் முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குனர்,மாவட்ட ஆட்சியர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தபால் பெட்டி மூலம் அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார்.

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ செயலாளர் முத்துமுருகன்,திருநெல்வேலி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயற்பியல் ஆசிரியை கமலாராணி அனைவரையும் வரவேற்றார். சூரிய பொங்கல் வாழ்த்து அட்டையினை தமிழக முதலமைச்சர் உள்பட உறவினர்கள்,நண்பர்களுக்கு தபால் பெட்டி மூலம் அனுப்பி வைத்தனர்.

இதில் பள்ளி ஆசிரியர்கள் சுஜா,அகிலாராணி தபால் துறை அலுவலர் பெருமாள் சாமி உள்பட ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இயற்பியல் ஆசிரியை கிரேனா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory