» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:02:18 PM (IST)
திருச்செந்தூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து 6 மாதங்களாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் (38) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் 2ல் நடைபெற்று வந்த நிலையில் எதிரி செல்வன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கடந்த 30.06.2025 அன்று நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்தையடுத்து போலீசார் தொடர்ந்து செல்வனை தேடிவந்தனர்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 6 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த செல்வனை நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வன் (38) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் நீதிமன்றம் 2ல் நடைபெற்று வந்த நிலையில் எதிரி செல்வன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கடந்த 30.06.2025 அன்று நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்தையடுத்து போலீசார் தொடர்ந்து செல்வனை தேடிவந்தனர்.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 6 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த செல்வனை நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST)

கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:42:58 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரூ. 784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:12:09 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)










