» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஆயுதம் வைத்திருந்தவர் கைது : 3 இளஞ்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு

செவ்வாய் 13, ஜனவரி 2026 4:48:09 PM (IST)

தூத்துக்குடியில் அரிவாளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 இளஞ்சிறார்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர்  திருமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று டைடல் பார்க் உப்பளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில்  தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் (23) மற்றும் 3 இளஞ்சிறார்கள் என்பதும் அவர்களிடம் பெரிய அரிவாள் இருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி நபர்களிடமிருந்து ஒரு அரிவாள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களில் சிவக்குமாரை கைது செய்தும் 3 இளஞ்சிறார்களை திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory