» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கனமழையால் வீடுகளுக்கு புகுந்த தண்ணீர் - பொருட்கள் சேதம் - தூத்துக்குடியில் மக்கள் அவதி!
வியாழன் 16, அக்டோபர் 2025 10:22:34 AM (IST)

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
தூத்துக்குடியில் இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளான பழைய மாநகராட்சி பகுதி மற்றும் பேட்டரிக் சர்ச் பகுதி, காந்தி சிலை, மட்டக்கடை எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட் பகுதி, தமிழ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. பெரைரா தெரு, சின்ன கடை தெரு மத்திய பாகம் காவல் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.
சந்தை ரோட்டில் உள்ள எஸ்பிஜி கோவில் தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த மின் சாதன பொருட்கள் அனைத்தும் சேதமாகின. இந்த தெருவில் கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதால். அங்கே தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இந்த தெரு முழுவதும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. இதேபால தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்தது.

தூத்துக்குடி மாநகராட்சியில் கழிவுநீர் கால்வாய் மேம்படுத்துவதில் அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தினசரி பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி பல்வேறு நடவடிக்கையில் எடுத்தாலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததை ஒரு நாள் மழைக்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருச்செந்தூர் பிரதான சாலையில் முத்தையாபுரம் முதல் முள்ளக்காடு வரை வடிகால் அமைக்கப்படாததால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக சென்னை, கோவை பெங்களூரு மற்றும் மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில இருந்து வரக்கூடிய பஸ்கள் ஊர்ந்து சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்து உள்ளனர்.

மக்கள் கருத்து
கந்தசாமிOct 16, 2025 - 01:42:08 PM | Posted IP 162.1*****
மேயர் என்னமோ கிழித்தாக சொன்னான் அது எல்லாம் பொய் என்று மழை காட்டி விட்டது
மேலும் தொடரும் செய்திகள்

வயல் வேலைக்குச் சென்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழப்பு
புதன் 10, டிசம்பர் 2025 11:03:21 AM (IST)

பைக் நிலை தடுமாறி விழுந்ததில் துறைமுக தொழிலாளர் பரிதாப சாவு
புதன் 10, டிசம்பர் 2025 10:54:35 AM (IST)

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)











முட்டாள்Oct 17, 2025 - 02:09:43 PM | Posted IP 104.2*****