» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் நாளை முதல் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் : தெற்கு ரயில்வே தகவல்!
புதன் 8, அக்டோபர் 2025 11:59:56 AM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் நாளை (அக்.9) முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் கடந்த 2024 செப்டம்பா் முதல் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 16 பெட்டிகளாக இருந்த ‘வந்தே பாரத்’ ரயில் தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
இதனிடையே வந்தே பாரத் ரயில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இதுவரை நிற்காமல் சென்று வந்தது. அங்கு நின்று செல்ல அனுமதிக்குமாறு பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவந்தனா். இதையடுத்து தற்போது கோவில்பட்டியிலும் ‘வந்தே பாரத்’ ரயில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது.
இந்தநிலையில், நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் வரும் 9 ஆம் தேதி முதல் கோவில்பட்டியில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. . காலை 6.05 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் 6.38 முதல் 6.40 வரை நின்று செல்லும். மறுமார்க்கமாக சென்னையிலிருந்து புறப்படும் ரயில் இரவு 9.23 முதல் 9.25 மணி வரை நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










