» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நூறு நாள் திட்ட பணியாளர்கள் மூலம் மரம் நட வேண்டும் : எம்பவர் கோரிக்கை

வெள்ளி 10, மே 2024 8:52:25 PM (IST)

100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணியாளர்களை பயன்படுத்தி மரங்கள் வளர்த்து தமிழ்நாட்டை வறட்சியிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணியாளர்களை இது தொடர்பாக எம்பவர் நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவ செயலாளர் ஆ. சங்கர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு "தமிழ் நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்கள் 38, கிராம பஞ்சாயத்துகள் 12,618, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் குறைந்தது 5 குக்கிராமங்கள் இருக்கும். அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிவோர் மூலம், மாதம் ஒரு செடி மட்டுமே நட்டு பராமரித்து வந்தால் நம் கிராமங்கள் பசுமையான கிராமங்களாக மாறிவிடும். 12,618 கிராம பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் 50 பேர் பணிபுரிகிறார்கள் எனில் 12,618 × 50 ஸ்ரீ 6,30,900 நபர்கள் மாதம் ஒரு செடி நடவு எனில் 6,30,900 எனில் 12 மாதங்களுக்கு 6,30,900×12 ஸ்ரீ 75,70,800. தமிழ்நாட்டை பொறுத்த வரை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் மழைக்காலங்கள் ஆகும்.

இந்த காலங்களில் செடி நடவு செய்து ஒரு வருட காலம் பராமரித்தால்; மரங்கள் வேர்களில் சேமித்து வைத்துள்ள ஈரத்தன்மையால் தானாக வளர்ந்து விடும். இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து, நமக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் செடிகள் நடவு செய்ய தேவைப்படும் செடிகள், வனத்துறை, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகியோர் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் இந்த மூன்று துறை அலுவலர்களும் கிராமங்களில் நடைபெறும் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்ட பணியாளர்களை பயன்படுத்தி ஒரு பஞ்சாயத்திற்கு வருடத்திற்கு 500 செடிகள் எனக் கணக்கிட்டு கிராமங்களில் மரம் வளர்த்தால் தமிழ்நாட்டை வறட்சியிலிருந்து காப்பாற்றலாம். மேலும் எதிர் காலத்தில் வெப்பத்தை எளிதாக தணிக்கலாம். ஆகவே, 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தில் பணிபுரிவோர் மூலம், மாதம் ஒரு செடியை நட்டு பராமரிக்க ஆணையிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory