» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது!

திங்கள் 20, மே 2024 5:29:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

கடந்த 19.04.2024 அன்று தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு, பொட்டல்காடு ஜங்ஷன் பகுதியில் ஒரு டீக்கடையில் வைத்து முள்ளக்காடு பகுதியை சேர்ந்த செந்தில்வேலன் மகன் பிரேம்குமார் (19) என்பவரையும், டீக்கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த ராமஜெயம் மகன் வேல்ராஜ் (45) என்பவரையும் முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில்  குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஹரிசிங் (23), முருகன் மகன் சக்திவேல் (24) மற்றும் ஆறுமுகம் மகன் ரமேஷ் ரேவிந்த் (24) ஆகிய மூவரையும் முத்தையாபுரம் போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட ஹரிசிங், சக்திவேல் மற்றும் ரமேஷ் ரேவிந்த் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர்  செந்தில்வேல்குமார் 3பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory