» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் குடிநீர் பந்தல் : சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்!

வெள்ளி 10, மே 2024 11:56:24 AM (IST)



தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர்  சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகில் தெற்கு மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர் துரைசிங் ஏற்பாட்டில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன்  திறந்து வைத்து  மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், எலுமிச்சை ஜூஸ், தா்பூசணி ஜூஸ், உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட எம்.ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன். முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர் ரத்தினம், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குநர் பாலசுப்பிரமணியன், வட்ட செயலாளர்கள் சகாயராஜ்,  அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory