» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் 94.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி
வெள்ளி 10, மே 2024 10:22:11 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இது குறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கூறுகையில் "தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 21 ஆயிரத்து 843 மாணவா்- மாணவிகள் எழுதினர். இதில், 20 ஆயிரத்து 618 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.39% ஆகும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 10,534 மாணவர்கள் எழுதினர். இதில் 9,645பேர் தேர்ச்சி (91.56%) பெற்றுள்ளனர். மாணவிகள் 11,309 பேர் தேர்வு எழுதினர். இதில் 10,973பேர் தேர்ச்சி 97.03% பெற்றுள்ளனர். மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் 9வது இடம் பிடித்துள்ளது. மாவட்டத்தில் 129 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 95.58% தேர்ச்சியுடன் தூத்துக்குடி மாவட்டம் மாநில அளவில் 5வது இடம் பிடித்திருந்தது. தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், மாணவ, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.