» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் துவக்கம்

புதன் 1, மே 2024 8:25:35 PM (IST)



நாசரேத்தில் மாணவர்களுக்கான கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் இன்று புதன்கிழமை துவங்கியது.    
 
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில்  மாணவர்களுக்கு வருடந்தோறும் கோடை கால கால்பந்து பயிற்சி  நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் கோடைகால கால்பந்து பயிற்சி இன்று புதன்கிழமை துவங்கி 10 நாட்கள் நடக்கிறது. பயிற்சி துவக்க விழாவிற்கு தூய யோவான் பேராலய தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து பயிற்சியை துவக்கி வைத்தார்.  

இப்பயிற்சியில் 4 ம் வகுப்பு முதல் 12 ம் வரை  பயிலும் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். பயிற்சி தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை  4  மணி முதல் 6 மணி வரையிலும் நடக்கிறது. இந்நிகழ்வில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கென்னடி வேத ராஜ், உதவி தலைமை ஆசிரியர் ஜெயசீலன், உடற்பயிற்சி ஆசிரியர் தனபால், நசரேயன், அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory