» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியா் அலுவலகத்தில் பிற தொகுதி தபால் வாக்குகள் பிரிக்கும் பணி

செவ்வாய் 30, ஏப்ரல் 2024 8:21:24 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற தொகுதி தபால் வாக்குகளை பிரிக்கும் பணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவுகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளில் வாக்குச் சாவடி அலுவலா் பயிற்சி நடைபெற்ற இடங்கள் ஆகிய 7 இடங்களில் நடைபெற்றது. இந்த இடங்களில் பதிவான தபால் வாக்குகள் தூத்துக்குடி தொகுதியில் உள்ளவை பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பிற தொகுதி தபால் வாக்குகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தபால் வாக்கு அதிகாரி சொா்ணராஜ் தலைமையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திங்கள்கிழமை தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டது. இந்த தபால் வாக்குகள் அனைத்தும், இன்று செவ்வாய்க்கிழமை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தலைமையில் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory