» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் திடீர் மரணம் : போலீஸ் விசாரணை!

திங்கள் 29, ஏப்ரல் 2024 11:03:34 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கான் நாயக் மகன் திவானி நாயக் (55). இவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்து வரும் கட்டுமான பணியில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அங்குள் லேபர் ஷெட்டில் தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் அவர் எழுந்திருக்கவில்லை. 

இதையடுத்து தொழிலாளர்கள் சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory