» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லயன்ஸ் டவுன் பகுதியில் குடிநீர் பிரச்சனை : மேயர் ஆய்வு

சனி 27, ஏப்ரல் 2024 9:53:50 PM (IST)



தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியில் குடிநீர் முறையாக வரவில்லை என அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரையடுத்து மேயர் ஜெகன் பெரியசாமி அப்பகுதியை ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், புதிய வழித்தடத்தில் அந்தப் பகுதிகளில் குடிநீர் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மாநகர மக்கள் கடுமையான கோடைகாலமாக இருப்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆய்வின் போது, திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின், அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து

மக்கள்Apr 27, 2024 - 10:58:04 PM | Posted IP 172.7*****

தண்ணீரை‌ சிக்கனமாக மக்கள் பயன்படுத்த வேண்டும். தண்ணீர்‌தொட்டியில் நீர்‌நிறைந்து உபரி நீர் வீணாக தெருக்களில் ஓடுமளவிற்கு பலரும் விழிப்புணர்வு இன்றி இருக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதில் தீவிர கவனம் செலுத்தி விரைவில் தண்ணீர் இணைப்பிற்கு மீட்டர் பொருத்தி கண்காணிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory