» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணத் தகராறில் பெயிண்டர் குத்திக் கொலை :‍ வாலிபர் வெறிச்செயல்!

வெள்ளி 10, மே 2024 10:45:21 AM (IST)

கோவில்பட்டியில் பண விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் முத்துப்பாண்டி (42). இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். முத்துப்பாண்டி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். மேலும், பணம் கொடுக்கல் வாங்கல்  தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகரில், உள்ள தனது தாய் மாரியம்மாள் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது வீரபாண்டி நகரை சேர்ந்த அந்தோணி மகன் மணிகண்டன் (27) என்பவர் வீட்டிற்கு வந்துள்ளனர். பின்னர் இருவரும் மது குடித்தார்களாம். அப்போது இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் முத்துப்பாண்டியை சரமாரியாக கத்தியால் குத்தினாராம். இதில் ரத்த வெள்ளத்தில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

பின்னர் அங்கிருந்து மணிகண்டன் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸிலி தேவானந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory