» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வீரசக்கதேவி ஆலய விழா தொடர் ஜோதி: கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்!

வெள்ளி 10, மே 2024 11:10:45 AM (IST)



கயத்தாறில்  வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி  வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞரணி சார்பில்  தொடர் ஜோதி ஓட்டம் இன்று நடைபெற்றது. கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட  இடத்தில்  தொடங்கிய தொடர் ஓட்டத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

முன்னதாக, அவர் மணிமண்டபத்தில் உள்ள கட்டபொம்மன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடர் ஜோதி ஓட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் இருந்து மதுரை மெயின் ரோடு வழியாக  கயத்தாறு, கடம்பூர், பசுவந்தனை, கீழமுடிமன், ஓட்டப்பிடாரம் வழியாக பாஞ்சாலங்குறிச்சிக்கு   40 கிலோ மீட்டர் தொடர் ஜோதி ஓட்டமாக  இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனர். 

இதையொட்டி கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் கயத்தார் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், பால், காசிலிங்கம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory