» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீரசக்கதேவி ஆலய விழா தொடர் ஜோதி: கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்!
வெள்ளி 10, மே 2024 11:10:45 AM (IST)
கயத்தாறில் வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழாவை முன்னிட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞரணி சார்பில் தொடர் ஜோதி ஓட்டம் இன்று நடைபெற்றது. கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் தொடங்கிய தொடர் ஓட்டத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
முன்னதாக, அவர் மணிமண்டபத்தில் உள்ள கட்டபொம்மன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடர் ஜோதி ஓட்டம் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் இருந்து மதுரை மெயின் ரோடு வழியாக கயத்தாறு, கடம்பூர், பசுவந்தனை, கீழமுடிமன், ஓட்டப்பிடாரம் வழியாக பாஞ்சாலங்குறிச்சிக்கு 40 கிலோ மீட்டர் தொடர் ஜோதி ஓட்டமாக இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனர்.
இதையொட்டி கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் கயத்தார் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், பால், காசிலிங்கம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.