» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓய்வுபெற்ற எஸ்.ஐ., பைக் விபத்தில் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 10, மே 2024 10:52:21 AM (IST)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் படுகாயம் அடைந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி அருகே உள்ள வர்த்தக ரெட்டி பட்டி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் மந்திரமூர்த்தி (66). ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர். இவர் நேற்று தூத்துக்குடி - திருநெல்வேலி ரோட்டில் வாகைகுளம் டோல்கேட் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த மந்திரமூர்த்தி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Balkiமே 10, 2024 - 10:56:54 AM | Posted IP 162.1*****