» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓய்வுபெற்ற எஸ்.ஐ., பைக் விபத்தில் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!

வெள்ளி 10, மே 2024 10:52:21 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் படுகாயம் அடைந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி அருகே உள்ள வர்த்தக ரெட்டி பட்டி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் மந்திரமூர்த்தி (66). ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர். இவர் நேற்று தூத்துக்குடி - திருநெல்வேலி ரோட்டில் வாகைகுளம் டோல்கேட் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த மந்திரமூர்த்தி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

Balkiமே 10, 2024 - 10:56:54 AM | Posted IP 162.1*****

Age different

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory