» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாராளுமன்ற பொது தேர்தல்: தூத்துக்குடி தொகுதியில் வேட்புமனுக்கள் பரீசிலனை!
வியாழன் 28, மார்ச் 2024 12:00:11 PM (IST)
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வேட்புமனுக்கள் பரீசிலனை செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபெற உள்ளதை முன்னிட்டு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை பரீசிலனை செய்யும் பணி தேர்தல் பொது பார்வையாளர்திவேஷ் ஷெஹரா மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.