» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் ஆட்சியர் ஆய்வு
சனி 27, ஏப்ரல் 2024 3:17:42 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று கள ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள தடுப்பணைகளில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி இன்று களஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் (கீழ் தாமிரபரணி வடிநிலக் கோட்டம்) ஆதிமூலம், உதவி நிர்வாகப் பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) குமார், திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார், உதவிப் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
NameApr 27, 2024 - 08:15:11 PM | Posted IP 172.7*****