» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாகனத்தில் கடத்திய ரூ.2.25லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்: 3பேர் கைது!

சனி 27, ஏப்ரல் 2024 4:26:36 PM (IST)

கோவில்பட்டியில் சட்டவிரோத விற்பனைக்காக ரூ.2.25லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர்  கிங்ஸிலி தேவ் ஆனந்த் மற்றும் சார்பு ஆய்வாளர்  செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று ஆலம்பட்டி மெயின் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், கோவில்பட்டி கடலைகார தெருவை சேர்ந்த பூவலிங்கம் மகன் பாண்டிமணி (30), ராமராஜ் மகன் ரகுபதி (29) மற்றும் மந்திதோப்பு ரோடு பகுதியைச் சேர்ந்த மாரிகண்ணன் ரஞ்சித் (33) ஆகிய 3 பேரும் சேர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது.

உடனே போலீசார் பாண்டிமணி, ரகுபதி மற்றும் ரஞ்சித் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.2லட்சத்து 25ஆயிரத்து 930  மதிப்புள்ள 346 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory