» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பாட்டக்கரை ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா

செவ்வாய் 14, மே 2024 9:22:43 PM (IST)



பாட்டக்கரை ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு விழா நடந்தது. 

தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி _ நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் 10 நாட்கள் நடந்தது.இதன் நிறைவு விழா ஆலய வளாகத்தில் நடந்தது. சேகர தலைவர் ஜெபாஸ் ரஞ்சித் தனராஜ்  தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார். 

அக்சாள், சங்கீதா ஆகியோர்  விபிஎஸ் இயக்குனர்களாக செயல்பட்டனர். கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதையடுத்து மாணவ_ மாணவிகளுக்கு பரிசுகள்  மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில்  திரளானோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை சேகர தலைவர் ஜெபாஸ், சபை ஊழியர் கிறிஸ்டோபர், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜெபசிங், ஆலய பணியாளர் ஜாண் தங்கத்துரை மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory