» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் ஜி 20 சாதனை விளக்க நிகழ்ச்சிகள்!

செவ்வாய் 10, அக்டோபர் 2023 5:40:06 PM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் ஜி 20 சாதனை விளக்க நிகழ்ச்சிகள் நடை பெற்றது.         
       
ஒன்பதாவது தமிழ்நாடு சைகை  கம்பெனி என்.சி.சி. திருநெல்வேலி கமாண்டர் அதிகாரி டி.ஆர்.டி.சியின் உத்தரவின்பேரில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. மாணவர் கள் சார்பில் ஜி 20 சாதனை விளக்க நிகழ்ச்சி  நடைபெற் றது.இந்நிகழ்ச்சிக்கு  தலை மையாசிரியர் கென்னடி வேதராஜ்  தலைமை தாங் கினார். சுபேதார் தசரதன் மற்றும் ஹவில்தார் குருங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுஜித் செல்வ சுந்தர் வரவேற்றார்.

நிகழ்ச் சியில் என்.சி.சி. மாணவர் கள் சிலம்பம் செயல் விளக் கம் அளித்தனர்.பள்ளி வளா கத்தில் மரக்கன்று நட்டனர். முன்னதாக ஓவியப் போட்டி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஜி 20 கலை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் அலுவலர் ஜெயசீலன் சேகர் டேவிட் நன்றி கூறினார். 

உதவி தலைமையாசிரியர் சார் லஸ் திரவியம்,ஆசிரியர்கள் ஜெயகுமார் டேவிட், அலெக் சன் கிறிஸ்டோபர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் சுதாகர் ஆலோசனையின் பேரில் தலைமையாசிரியர் கென் னடி வேதராஜ் தலைமை யில் என்.சி.சி. ஆசிரியர்  சுஜித் செல்வ சுந்தர் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்து இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory