» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கபடி போட்டி: சாத்தான்குளம் மகளிர் கல்லூரி முதலிடம்!

புதன் 6, மார்ச் 2024 8:25:39 PM (IST)



திசையன்விளையில் நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள்அணியினர் முதலிடம் பெற்றனர்.

திசையன்விளை விஎஸ்ஆர் பள்ளியில் காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் இருந்து பள்ளி, கல்லூரி அணிகள் பங்கேற்றனர். இதில் சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி தமிழ்மலர் தலைமையில், கணிதவியல் துறை மாணவி லாவண்யா, வணிக நிர்வாகவியல் துறை மாணவிகள் பிரியா பிரதிஷா, கல்பனா, முத்து பிரிதிபா, சங்கரம்மாள், பார்வதி சந்தியா, இசக்கியம்மாள், இளைய சித்ரா, கணினி அறிவியல் துறை மாணவிகள் செல்வஜோதி, பார்வதி , ஆங்கில துறை மாணவி செல்வம் ஜெனிபர் ஆகிய மாணவிகள் அணியினர் கலந்து கொண்டு திசையன்விளை விஎஸ்ஆர் கிளப் அணியை வென்று முதலிடம் பெற்றனர். 

இப்போட்டியில் மாணவி செல்வம்ஜெனிபர் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு பெற்றார்.  வெற்றி மாணவிகளையும், பயிற்சி அளித்த கல்லூரி உடற்பயிற்சி இயக்குனர் ரமேஷ், ஆகியோரை கல்லூரி முதல்வர் கலைவாணி மற்றும் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory