» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தேசிய கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு!

ஞாயிறு 31, டிசம்பர் 2023 9:05:11 AM (IST)

தேசிய கைப்பந்து போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவிக்கு கோவில்பட்டியில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி பரணி சுபா, தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் தேர்ச்சி பெற்று, பின்னர் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் தேர்ச்சி பெற்று, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய அளவிலான 14 வயதிற்குட்பட்ட கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து நேற்று கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய மாணவிக்கு இந்தியன் ஸ்டார் வாலிபால் கிளப் மேலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வாரியர்ஸ் வாலிபால் கிளப் வழக்கறிஞர் பாலமுருகன், உடற்கல்வி ஆசிரியர் தனபால், விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட இணை செயலாளர் சத்யா, நகர தலைவர் சுரேஷ் மணிகண்டன், காவலர் பால்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory