» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்தியா தோல்வி!

புதன் 13, டிசம்பர் 2023 10:16:50 AM (IST)



தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.  இதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டி 20 போட்டி டர்பனில் கடந்த 10ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், அங்கு மழை பெய்த காரணத்தினால், அந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2 வது டி 20 போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. அணியை கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழி நடத்தினார். டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் இருந்து, முதலாவதாக களமிறங்கிய ஜெய்ஸ்வால்  3வது பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். 

2வதாக களமிறங்கிய சுப்மன் கில் 2 வது ஓவரின் கடைசி பந்தில் டக் அவுட் ஆனார். இதனால், 2 வது ஓவர் முடிவில் இந்திய அணி வெறும் 6 ரன்களுக்கு 2 பெரும் விக்கெட்டுகளை காவு கொடுத்து விட்டது. இதனை தொடர்ந்து 3 வது விக்கெட்டிற்கு திலக் வர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ரன்கள் எடுத்த நிலையில், திலக் வர்மா 29 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் அதிரடியாக ஆடினார். 

இந்த ஜோடி, அணியை ஏறு வரிசை பாதைக்கு அழைத்து சென்றது. இதனிடையே அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.  அடுத்த வந்த ஜிதேஷ் 1 ரன்னில் அவுட்டாக, ஜடேஜா 19 ரன்னில் அவுட் ஆனார். ரிங்கு சிங் மட்டும் பொறுப்பாகி ஆடி 39 பந்துகளில், 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில், இந்திய அணி 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்களை எடுத்திருந்தது.

ஆனால், இடையே மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து டிஎல்எஸ் முறையில் போட்டியை அணுகிய நிர்வாகம், தென் ஆப்பிரிக்கா அணி தன்னுடைய வெற்றிக்கு 15 ஓவர்களில் 152 ரன்களை எடுக்க வேண்டும் என்று கூறி இலக்கு நிர்ணயித்தது. 

இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. இதனால் 13.5 ஓவர்கள் முடிவிலேயே 5 விக்கெட்டுகளை இழப்பு 154 ரன்களை குவித்து போட்டியை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி முன்னிலை பெற்று இருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory