» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாபா இந்திரஜித் சதம்: விஜய் ஹசாரே கோப்பை அரை இறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி!

செவ்வாய் 12, டிசம்பர் 2023 10:50:10 AM (IST)



விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கால் இறுதி ஆட்டத்தில் மும்பையை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மும்பை அணி 48.3 ஓவர்களில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிரசாத் பவார் 58 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் சேர்த்தார். ஷிவம் துபே 45, ஜெய் பிஷ்தா 37, ஷம்ஸ்முலானி 27, ஹர்திக் தாமோர் 24 ரன்கள் சேர்த்தனர். பந்து வீச்சில் தமிழ்நாடு அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி, சாய்கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் மணிமாறன் சித்தார்த், பாபா அபராஜித் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

228 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழ்நாடு 43.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபா இந்திரஜித் 98 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 103 ரன்களும், விஜய் சங்கர் 58 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக பாபா அபராஜித் 45, நாராயண் ஜெகதீசன் 27, நிதிஷ் ராஜகோபால் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகனாக பாபாஇந்திரஜித் தேர்வானார். அரை இறுதியில் தமிழ்நாடு அணி நாளை (13-ம் தேதி) ஹரியாணாவுடன் மோதுகிறது. பிற்பகல் 1.30மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory