» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கடைசி பந்தில் லக்னோ த்ரில் வெற்றி: பெங்களூரு ரசிகர்களை நோக்கி கம்பீர் செய்த காரியம்!!

செவ்வாய் 11, ஏப்ரல் 2023 5:02:17 PM (IST)



பெங்களூரு அணியை லக்னோ வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில், ரசிகர்களை நோக்கி கம்பீர் செய்த செய்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூரு - லக்னோ அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய லக்னோ நிகோலஸ் பூரானின் அதிரடியால் கடைசி பந்தில் வெற்றிபெற்றது.

கடைசி ஓவரில் 5 ரன் தேவைப்பட்ட நிலையில் கடைசி பந்தில் லக்னோ வெற்றிபெற்றது. கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்ட நிலையில் பந்து கீப்பர் தினேஷ் கார்த்திக் பக்கம் செல்ல அவர் பந்தை ஸ்டம்ப் நோக்கி வீசினார். ஆனால் அதற்குள் லக்னோ வீரர்கள் ரன் ஓடியதால் லக்னோ அணி கடைசி பந்தில் திரில் வெற்றிபெற்றது.

இந்த திரில் போட்டியில் லக்னோ வெற்றிபெற்றதையடுத்து லக்னோ வீரர்கள் மைதானத்திற்குள் விரைந்து வந்து ஆரவாரம் செய்தனர். அப்போது, லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் மைதானத்தில் குவிந்திருந்த பெங்களூரு ரசிகர்களை நோக்கி 'வாயை மூடும்படி செய்கை' செய்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory