» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீடுபுகுந்து கல்லூரி மாணவிக்கு வெட்டு: கஞ்சா போதை இளைஞர் கைது; இருவருக்கு வலை!
புதன் 15, ஏப்ரல் 2026 5:19:42 PM (IST)
மீஞ்சூர் சென்னையை அடுத்த மீஞ்சூரில், கல்லூரித் தேர்வுக்காக வீட்டில் படித்துக் கொண்டிருந்த மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதோடு, கத்தியால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற கஞ்சா போதை கும்பலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் முகமது அஸ்கர். இவரது மகள் சுமையா ஃபாத்திமா (18), தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருவதால், நேற்று இரவு மாணவி தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் தனியாகப் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள், வீட்டின் பின்புறம் உள்ள முட்புதர் வழியாகப் பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்று, அங்கிருந்து மாணவி ஃபாத்திமாவின் வீட்டு மாடியில் குதித்துள்ளனர். அறையில் புகுந்த அந்த கும்பல், மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. மாணவி கூச்சலிடவே, ஆத்திரமடைந்த அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஃபாத்திமாவின் தலை, கை மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், தப்பியோட முயன்றவர்களில் ஒருவனை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். படுகாயமடைந்த மாணவி ஃபாத்திமா, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞர் டில்லி பாபு என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட டில்லி பாபு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 'ரீல்ஸ்' பதிவிட்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்த மாணவி மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொலைக்காட்சிப் பெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் : தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:31:43 PM (IST)

தொழில் அதிபர் வீட்டில் ரூ.2 கோடி நகை - பணம் பறிமுதல் : தேர்தல் நெருங்கும் வேளையில் பரபரப்பு
ஞாயிறு 19, ஏப்ரல் 2026 9:50:44 AM (IST)

பெண்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைப்பு: திமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
சனி 18, ஏப்ரல் 2026 5:01:01 PM (IST)

பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று த.வெ.க. தலைவர் விஜய் வாக்கு சேகரிப்பு
சனி 18, ஏப்ரல் 2026 4:36:39 PM (IST)

தொகுதி மறுவரையறை மசோதா வீழ்ச்சி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சனி 18, ஏப்ரல் 2026 4:31:58 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!
சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)





