» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை: தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பு!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:49:36 AM (IST)

தஞ்சை அருகே தேர்தல் பிரசாரத்திற்காகச் சென்ற திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் வாகனத்தை மறித்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்காக, முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தஞ்சாவூர் சென்றடைந்தார். அங்கிருந்து பிரசார வாகனத்தில் சாலை வழியாகத் திருவாரூர் நோக்கிப் பயணம் மேற்கொண்டார்.
அவர் தஞ்சாவூர் அடுத்த சாலியமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு பணியில் இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் முதல்வரின் வாகனத்தை நிறுத்தினர். உரிய விதிமுறைகளின்படி, அதிகாரிகள் வாகனத்திற்குள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது முதல்வர் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார். சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கண்டறியப்படாததைத் தொடர்ந்து, வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது.
சோதனைக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மையார் நினைவகத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் இன்று வாக்கு சேகரிக்கிறார். கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி சோதனைச் சாவடி அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் காரை நிறுத்தி பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது முதல்வரின் வாகனத்திலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாம் தமிழர் கட்சியினர் சட்டப்பேரவை செல்ல வேண்டும் : மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சேரன்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:10:13 PM (IST)

தனி தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர் வேட்புமனு தள்ளுபடி: இந்து முன்னணி வலியுறுத்தல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:05:02 PM (IST)

எந்தத் தொகுதியில் நின்றாலும் நெல்லைக்கு செல்லப்பிள்ளை நான்: நயினார் நாகேந்திரன்
செவ்வாய் 31, மார்ச் 2026 3:48:10 PM (IST)

விஜய் மீது வழக்கு: டி.ஜி.பி-யிடம் அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 3:30:09 PM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

பச்சிளம் குழந்தையைக் கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது: குமரியில் அதிர்ச்சி!
செவ்வாய் 31, மார்ச் 2026 11:27:31 AM (IST)







