» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருக்குறள் முற்றோதுதல்: உலக சாதனை படைத்த இரண்டாம் வகுப்பு மாணவன்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 12:01:14 PM (IST)

திருக்குறள் முற்றோதுதல் போட்டியில் திருப்பூர் பள்ளியில் பயிலும் இரண்டாம் வகுப்பு மாணவன் உலக சாதனை படைத்துள்ளார்.
திருப்பூர் 15 வேலம்பாளையம், சுவர்ணபுரி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் - நர்மதா தம்பதியினரின் மகன் ஜெய் நிகிலேஷ். இவர் அங்குள்ள ஸ்ரீ நாச்சம்மாள் வித்யா வாணி பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 'திருக்குறள் முற்றோதுதல் உலக அருஞ்செயல் தொடர் நிகழ்வு (2025-26)' என்ற போட்டியில் கலந்து கொண்ட மாணவன் ஜெய் நிகிலேஷ், தனது அபார திறமையால் உலக சாதனைப் படைத்துள்ளார்.
குறைந்த வயதிலேயே திருக்குறள் முழுவதையும் பிழையின்றி ஒப்பித்து உலக சாதனைப் பட்டியலில் இடம் பிடித்த இந்த மாணவனைப் பாராட்டி, பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். மாணவனின் இந்த சாதனை அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த பெண் ஆஜராக நீதிமன்றம் நோட்டீஸ்!
புதன் 11, பிப்ரவரி 2026 12:14:53 PM (IST)

ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
புதன் 11, பிப்ரவரி 2026 11:46:32 AM (IST)

ஜனநாயகன் சென்சார் விவகாரம்: உயர் நீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனம்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:20:31 PM (IST)

தீராக்காதல் திருக்குறள் நாட்டிய நாடக நிகழ்ச்சி : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 5:03:39 PM (IST)

நாகர்கோவில் - பெங்களூர் ரயில் இயக்கி 12 வருடங்கள் நிறைவு :மேலும் ஒரு ரயில் வருமா...?
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:56:53 PM (IST)

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை : கனிமொழி எம்.பி. பேச்சு
செவ்வாய் 10, பிப்ரவரி 2026 4:36:33 PM (IST)










